பதவியில் இருந்து நீக்கப்பட்ட சிமித்
தென்னாபிரிக்க அணிக்கு எதிராக தற்போது நடைபெற்றுவரும் டெஸ்ட் ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணியின் வீரர் பான்குரொப்ட், பந்தை திட்டமிட்டுச் சேதப்படுத்திய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் அணித் தலைவர் சிமித் மற்றும் உபதலைவர் வோர்ணர் இருவரும் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.
தென்னாபிரிக்கா -– ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் தென்னா பிரிக்காவின் கேப்டவுனில் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தின மூன்றாம் நாள் ஆட்டத்தின்போது தென்னாபிரிக்க அணி துடுப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, ஆஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பான்குரொப்ட் பந்தை திட்டமிட்டுச் சேதப்படுத்தினார்.
அவர் ஒருவகைப் பொருளைக் கொண்டு (சான்ட் பேப்பர் என்று சொல்லப்படுகிறது) பந்தைச் சேதப்படுத்தும் காணொலி பன்னாட்டுக் கிரிக்கெட் சபையிடம் கொடுக்கப்பட்டது. இந் தக் குற்றத்தை அணித் தலைவர் சிமித் ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவரும் உபதலைவர் வோர்ணரும் பதவியில் இருந்து நீக்கப்பட்ட னர். ஆஸ்திரேலிய அரசும் இந்த முடிவை வரவேற்றுள்ளது.