Breaking News

மக்கள் நலச் சிந்தனையில் அயர்ச்சியற்ற உணர்திறன் அவசியம்

ஆளுகை தொடர்­பான எண்­ணக்­க­ரு­வாக, பொருண்­மை­யு­டைய கரு­வி­யாகப் பேசப்­ப­டு­கின்ற ‘நல்­லாட்சி’ எனும் பதம் மக்களுக்குப் புதி­தா­ன­தொன் றல்ல.அது நாக­ரி­கம் என்ற பொது­மைக்கு உட்­பட்ட பழ­மைச் சிறப்­பு­டை­யது என்று சொல்­லப்­ப­டு­கி­றது.
இதற்­கென தனித்­து­வ­மான வரை­யறை எது­வும் குறிப்­பி­டப்­ப­டாத போதி­லும்,உல­க­ளா­விய ரீதி­யில் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க, பொருத்­த­முறு குறி­யி­லக்கு வழக்­கில் இருந்து வரு­கி­றது.இதனை, சூழ்­நி­லைக்கு ஏற்ப, நெகிழ்ச்­சித் தன்­மை­யின் ஊடு­க­டத்­தி­யாக பல­ரும் பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.
நல்­லாட்சி’ எனும் தொனிப்பு
அந்­த­வ­கை­யிலே, இலங்­கை­யின் பொது நிர்­வாக சொற்­றொ­கு­தி­யில், கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்­பெற்ற அரச தலை ­வர் தேர்­த­லைத் தொடர்ந்து பேசு பொரு­ளா­கிப்­போன புதிய அவ­தா­ர­மாக, தீராத நிர்ப்­பந்­த­ மாக ‘நல்­லாட்சி’ எனும் தொனிப்பு, ஒழுங்­க­மை­வின்றி இழை­யோ­டிப் போயுள்­ளது.
இது அபி­வி­ருத்­தி­யி­ன­தும்,சமத்­து­வத்­தி­ன­தும் இலக்கை அடை­வ­தற்கு அவ­சி­யப்­பா­டு­டைய அர­சி­யல் மற்­றும் நிறு­வன ரீதி­யான நடை­மு­றை­கள்,அது சார்ந்து வெளிப்­பா­டு­க­ளு­டன் தொடர்­பு­று­கி­றது என்ற வெளிப்­ப­டுத்­தல் முன்­னி­லைப்­ப­டுத்­தப் பட்டு வரு­கி­றது.
தமிழ் மக்­க­ளின் எதிர்­கா­லச் சிந்­தனை நயம்
இந்­தச் சந்­தர்ப்­பத்­திலே,தமிழ் மக்­கள் தங்­க­ளு­டைய எதிர்­கா­லம் குறித்து சிந்­த­னை­வ­யப்­பட வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கின்­ற­னர்.அன்­றாட வாழ்­வி­ய­லில் எதிர்­வி­னை­க­ளி­டம் இருந்து தப்­பிப் பிழைத்து தம்மை நிலை நிறுத்­திக் கொள்­ளப் பாடு­பட வேண்­டி­ய­வர்­க­ளாக அசை­வு­று­கின்­ற­னர்.
குறிப்­பாக அர­சி­யல், பொரு­ளா­தார சித்­தாந் தங்­களை அறி­வு­டமை கொண்டு சீர்ப்­ப­டுத்தி, தமக்­கு­ரித்­தான அதி­ கா­ரப் பொறி­மு­றை­யாக அதனை வடி­வ­மைத்து, இயங்­கு­நிலை பெறச் செய்ய வேண்­டிய தேவையை உணர்ந்து கொள்ள வேண்­டும்.
அத­னைச் செயல்­வ­டி­வம் பெறச் செய்ய முயற்­சிக்க வேண்­டி­ய­வர்­க­ளாக இயங்­கு­நிலை பெற வேண்­டும்.
உரிமை என்ற உயர் படி­நி­லையை தம்­வ­யப்­ப­டுத்­திக்­கொள்ள முயற்­சிக்­க­ வும்,அதி­கார வர்க்­கத்­தோடு நியா­யங்­க­ளைத் தர்க்­கிக்­க­வும்,முரண்டு பிடித்­தால் உறை வாளாய் உண்­மை­களை இடித்­து­ரைத்து, தீர்வு பெற‘­அறை’ கொடுக்­க­வும் தயங்­கக்­கூ­டாது.
2009 ஆம் ஆண்­டு­க­ளின் முன்­பான பய­ண­வெளி
உண்­மை­யில் இவை சாத்­தி­யமா என்ற கேள்வி நிலை­கள் 2009 ஆம் ஆண்­டுக் காலப்­ப­கு­திக்கு முன்­பான பய­ண­வெ­ளி­யில் தமி­ழர்­க­ளி­டத்­தில் இருந்­த­தில்லை. அகிம்சை,ஆயு­தம் என்ற தோற்­று­வாய்­கள் தந்த ஆத்­ம­ப­லம் என்­பது, விடு­த­லை­யை­யும் அதன்­பால் முன் ந­கர்ந்த உரிமை வேட்­கை­யை­யும் ஒழுங்­கு­றக் கட்­ட­மைத்து வழி­ந­டத்­தின.
ஆனால், பன்­னா­டு­க­ளின் அனு­ச­ர­ணை­யோடு திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்ட மன்­னிக்க முடி­யாத ‘தமி­ ழர் தாயக இனப்­ப­டு­கொலை’ மீள முடி­யாத சோக இடு­கு­றி­யின் முற்­று­கை­யாக, அத்­தனை விட­யங்­க­ளை­யும்
கேள்­வி­நி­லைக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளது.
இதில் வாக்­கு­ரி­மை­யின் பலம் எம்­முன்­னாய் ஒப்­பு­விக்­கின்ற ‘ஜன­நா­ய­கம்’ என்ற உய்­வற்ற அயர்­நி­லைத் தாற்­ப­ரி­யம், பொருத்­த­மற்ற பிர­ச­வ­மாக மீள் சுழற்சி பெறு­கி­றது.பிர­தி­நி­தித்­து ­வங்­க­ளாக அந்­த­ரிக்­கி­றது.
ஜன­நா­ய­கத்­தின் கோலம்
கட்சி,கொள்கை,கொள்­கைப் பரப்­புரை,தேர்­தல் விஞ்­ஞா­ப­ னம்,உறுப்­பு­ரிமை,உறுப்­பி­னர் தெரிவு,அதி­கா­ரப் பரம்­பல்,நிதிப்­ப­ரம்­பல்,மக்­கள் பணத்­தில் கொழுத்த சம்­ப­ளம்,பொது நிகழ்­வு­க­ளில் வர­வேற்­புக் கம்­ப­ளம் எனக் காட்சி பெறும் இவர்­கள் வாழ்வு செந்­த­ளிக்­கி­றது.
வரை­ய­றுக்­கப்­பட்ட நிய­திச் சட்­டங்­க­ளின்­பின், ஜன­நா­யக செயல்­வெ­ளி­யாக அங்­கத்­து­வம் பெற்று நாடா­ளு­மன்­றம் செல்­கின்ற போதும்,அங்கு பேச்­சு­ரிமை என்­பது ஆக்­க­வு­ரி­மை­யாக மாற்­றம் பெறு­வ­தில்லை.
ஓர் பொது நிகழ்­வின் ஒன்­று­கூ­டல் போன்று, ஒரு­வ­ரு­டன் ஒரு­வர் அள­வ­ளா­வு­வ­தும், சந்­தர்ப்­பங்­க­ளில் முரண்­நிலை பெறு­வ­தும், கட­மைக்­காக விட­ய­தா­னங்­க­ளைப் பேசி அவற்­றைப் பதி­வாக்­கி­விட்டு உறங்­கு­நிலை பெறு­வ­தும், கால அவ­கா­சம் முடி­வ­ டைந்­த­த­தும் மீண்­டும் மக்­களை நாடி மண்­டி­யி­டு­வ­தும் என்ற, பற்­றற்ற அலங்­கார உற்­சவ மூர்த்­தி­க­ளின் எழுந்­த­ருள்­கை­ யாக இவர்­க­ளின் புரி­த­லற்ற ஆளுமை, அர­சி­யல் சம்­பி­ர­தா­ய­மாக பரம்­ப­ல­டை­கி­றது.
ஒரு­போ­தும் மக்­க­ளின் பொது­ந­லன் கரு­திய சேவை என்­பது முழுமை பெறு­வ­தில்லை; நிரம்­ப­ல் அடை­வ­தில்லை.
மக்­கள் நலச் சிந்­த­னை­யில்  அயர்ச்சி நிலை நில­வு­கி­றது
இலங்­கை­யைப் பொறுத்­த­வ­ரை­யில் மக்­கள் நலச் சிந்­த­னை­யில் அயர்ச்சி நிலையே ஆழ வேரூன்­றி­யுள்­ளது.குறிப்­பாக ‘நல்­லாட்சி’ என்ற சொல்­லாட்­சி­யின் அதி­கார வரன்­மு­றை­கள், தமிழ்­மக்­கள் சார்ந்த உணர்­தி­றன் தொடர்­பில் கரி­சனை கொள்­வ­தா­கத் தெரி­ய­வில்லை.
அதன் இயங்­கு­நி­லை­யும், செயல் வீரி­ய­மும் ஒழுங்­கு­மு­றைக்­குட்­ப­ட­வில்லை.இன­வாத முலாம் பூசிய,துருப்­பி­டித்த அழி­வின் கூர்­மு­னை­யாக, தமி­ழர்­களை அவர்­க­ளின் உரி­மை­யின்பால் உய்­ய­வி­டாது துன்ப வினை­யாக நச்­ச­ரித்­துக்­கொண்­டுள்­ளன.
திட்­ட­ மிட்ட போர் வல­யங்­க­ளின் உரு­வாக்­கம்,நில அப­க­ரிப்பு, அதி­க­ரித்த இரா­ணு­வப் பிர­சன்­னம், சுற்­றி­வ­ளைப்பு, தமிழ் இளை­ஞர்­கள் மீதான பல­வந்­த­மான கைது நட­வ­டிக்கை, காணா­மல் போகச் செய்­தல், தமிழ் பெண்­க­ளுக்­கெ­தி­ரான பாலி­யல் வன்­கொ­டுமை,தமி­ழர் பொருண்­மி­யத்­தின் கட்­ட­மி­டப்­பட்ட, திட்­ட­மிட்ட சுரண்­டல், மிக நீண்ட போர்,இனப் படு­கொலை என அவை ஆத­ர­வற்ற ,அநா­த­ர­வான துன்­பி­யல் அடை­மொ­ழி­யாக விடி­யலை வேண்டி நிற்­கின்­றன. இதுவே யதார்த்­தம்..!
தமி­ழர்­கள் குறித்­தான மனித உரிமை
இந்த நிலை­யிலே, மனித உரி­மை­கள் கூட்­டத்­தொ­ட­ரின் 37 ஆவது அமர்வு ஜெனீ­வா­வில் இடம்­பெற்று முடிந்திருக்கிறது. அந்தக் கூட்­டத் தொடர் ஆரம்­ப­மா­வ­தற்கு முன்­பா­கவே இலங்­கை­யின் மனித உரிமை மீறல்­கள் தொடர்­பில் வெளிப்­ப­டுத்­தல்­கள் பல முன்­வைக்­கப் பட்­டன.
குறிப்­பாக, “ஒன்­பது ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் தமி­ழர் தாய­கத்­தில் இடம்­பெற்ற போர்க்­குற்­றங்­க­ளுக்கு நீதி வழங்­கு­வ­தில் இலங்கை அரசு கொண்­டுள்ள செய­லற்ற தன்மை கவ­னிக்­கத்­தக்­கது.
இந்­தக் குற்­றங்­க­ளுக்கு எதி­ராக பன்­னாட்­ட­ள­வி­லான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்­டும்.” என ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் சைட் அல் குசைன் தெரி­வித்­தமை கவ­னிப்­புக்கு உரி­யது.
கடந்த பத்து மாதங்­க­ளில் மனித உரி­மை­கள் தொடர்­பில் இலங்கை அரசு கண்­டு­கொண்­டுள்ள முன்­னேற்­றம் தொடர்­பில் சிறப்பு அறிக்­கையை வெளி­யிட்ட அவர், போர்க் காலத்­தில் இடம்­பெற்ற மீறல்­கள் தொடர்­பான பொறுப்­புக்­கூ­ற­லில் அரசு தோல்வி கண்­டுள்­ள­தை­யும், வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார்.
ஐக்­கிய நாடு­க­ளின் உயர் ஆணை­யர், மனித உரி­மை­கள் ஆணை­யம், இந்­த­வி­ட­யங்­க­ளில் உல­க­ளா­விய அதி­கார வரம்­பின் பயன்­பாடு குறித்­துச் சிந்­திக்க வேண்­டும் என்­றும் சுட்­டிக்­காட்­டி ­யுள்­ளார்.
இத­னூடே மனித உரிமை மீறல்­கள் மற்­றும் தவ­றான மீறல்­க­ளுக்கு தண்­ட­னையை வழங்­கு­வ­தற்­கான திறனை அல்­லது விருப்­பத்தை இலங்கை அர­சும்,அதில் அங்­கம் வகிக்­கின்ற அதி­கா­ரி­க­ளும் இன்­ன­மும் நிரூ­பிக்­க­வில்லை என்­ப­தனையும் இடித்­து­ரைத்­துள்­ளார்.
தவிர, இலங்­கை­யில் நீதி முறைமை ஒன்றை அரசு அல்­லது இரா­ணுவ அதி­கா­ரி­க­ளு­டன் கையா­ளும் போது, பிர­தா­ன­மாக நீதித் துறை­யின் ஒட்­டு­மொத்த குணாம்­ச­மா­னது, அரச அதி­கா­ரி­கள் அல்­லது குற்­ற­வி­யல் நட­வ­டிக்­கை­க­ளில் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட பாது­காப்பு அதி­கா­ரி­கள் தொடர்­பாக நீதித்­துறை நிர்­வா­கத்­தில் ‘இரட்டை நிலைப்­பாடு’ தலை­தூக்­கும் என­வும் அந்த அறிக்கை சுட்­டிக்­காட்­டு­கி­றது.
பய­னு­று­தி­யற்ற செவி­வ­ழிச் செய்­தி­கள்
இத­னி­டையே ஐ.நா மனித உரி­மை­கள் சபை­யின் 37 ஆவது கூட்­டத் தொட­ரில் உரை­யாற்­றிய ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் சைட் அல் ஹூசைன், இலங்கை அர­சின் செயற்­போக்கு தொடர்­பில் வெளிப்­ப­டுத்­தி­யுள்ள, குறிப்­பாக உல­க­ளா­விய சட்ட நடை­மு­றை­களை போர்க்­குற்­றம் தொடர்­பில் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும்.
நிலை­மா­று­கால நீதி மற்­றும் பொறுப்­புக்­கூ­றல் செயன்­மு­றை­கள் பின்­பற்­றப்­பட வேண்­டும் என்ற கருத்­துக்­க­ளும், அண்­மை­யில் காணா­மல் ஆக்­கப்­பட்ட உற­வு­க­ளின் சொந்­தங்­களை சந்­தித்த சுவிஸ் தூது­வ­ரின், ‘அர­சுக்கு அழுத்­தம் கொடுப்­போம்’ என்ற ஆறு­தல் வார்த்­தை­க­ளும் செவி வழிச் செய்­தி­யா­கவே நகர்­கின்­றன.
செய­லற்ற அதன் பய­னு­றுதி என்­பது பூச்­சி­ய­மா­கவே இருக்­கும். ஏனெ­னில் போர் மற்­றும் அதன் பின்­வி­ளை­வு­ க­ளின் இறு­திக் கட்­டங்­க­ளில், பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­கள் காணா­மல் போயுள்­ளமை தொடர்­பில் ஐ.நாவும், மற்­றும் பல மனித உரி­மை­கள் அமைப்­புக்­க­ளும் நம்­ப­க­மான ஆதா­ரங்­களை பதிவு செய்­துள்­ளன.
ஆனால் அவை காணா­மற்­போன நபர்­கள் பற்­றிய தக­வ­லைச் சேக­ரித்து, பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு நிவா­ர­ணம் வழங்­கு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­தா­கத் தெரி­ய­வில்லை.
இதற்கு இணை­யான கட்­டி­யங்­கூ­ற­லாக, புதிய அர­ச­மைப்­பின் செயல் வேக­மும் ஆர்­வ­மற்ற வேண்டா வெறுப்­பான போக்­கி­லேயே பய­ணம் கொள்­கி­றது.இத­னைத் தமி­ழர் பிர­தி­நி­தித்­து­வங்­கள் கூட ஏற்­றுக்­கொண்­டுள்­ளன.இதனை ஐ.நா உத­விச் செய­ல­ரி­டம் பட்­ட­வர்த்­த­ன­மாக, காலத்­துக்­கேற்ற ‘திரு­வா­சக முற்­றோ­த­லாக’ எடுத்­தும் கூறித் தங்­கள் வேலை­க­ளில் ஒய்­யா­ரம் கொள்­கின்­ற­னர்.
இத்­த­னைக்­கும் மனித உரி­மை­கள் மீறல் தொடர்­பாக ஐ.நாவுக்கு தக­வல் வழங்­கி­ய­வர்­களை ‘தமிழ்ப் புலி ஆத­ர­வா­ளர்­கள்’ எனச் சுட்டி, நல்­லாட்­சி­யின் நாய­க­னாக அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கண்­ட­னம் தெரி­வித்­தி­ருந்­த­மை­யும் இங்கு நோக்­கு­தற்­கு­ரி­யது.
தமி­ழர்­க­ளுக்­கான தீர்வு தான் எப்­போது?
ஆக, நல்­லாட்சி என்ற தற்­கால நகர்­வின் செயல்­மு­றை­யில் பொது­வி­வ­கா­ரங்­கள்,வளங்­க­ளின் மீது கட்­டுப்­பாடு,குறிப்­பாக முறைகேடு மற்­றும் ஊழ­லற்ற தன்­மை­யில் மனித உரி­மை­க­ளின் உணர்­வுகளுக்கு உத்­த­ர­வா­த­ம­ளித்­தல், உரிய கவ­னத்­து­டன் கூடிய சட்ட ஆளுகை, பொறுப்­புக்­கூ­றல் மற்­றும் வெளிப்­ப­டைத் தன்மை போன்­ற­வற்­றுக்கு உரித்­தான தொடர்­பு­ற­லைக் கண்­டு­கொள்ள முடி­ய­வில்லை.
நல்­லாட்­சி­யின் உண்­மை­யான அள­வீடு என்­பது, நியா­ய­மான சட்ட உரிமை,தனிப்­பட்ட பாது­காப்பு,குடி­யி­யல்,கலா­சார,பொருண்­மிய மற்­றும் சமூக உரி­மை­கள் போன்ற ‘மனித உரி­மை­க­ளின்’ வாக்­கு­று­தி­கள் மீதான வெளிப்­ப­டுத்­தல்­க­ளின் அள­வாக இருக்க வேண்­டும்.
ஆனா­லும், இந்த விட­யங்­கள் இன்­ன­மும் தேடல் நிலை­யி­லேயே உள்­ள­தா­கவே தோன்­று­கி­றது.இதி­லி­ருந்து முயற்­சி­யின் விளிம்பை அடை­வது என்­பது கடி­னம்.எனவே தமி­ழர்­க­ளுக்­கான தீர்வு என்­பது, இன்­றைய நிலை­யில் கேள்­விக்­கு உரிய தொன்றே.
சுதந்­தி­ர­மான விடு­தலை என்­ப­தும் பகல் கனவை ஒத்­ததே. மொத்­தத்­தில், நல்­லாட்சி என்­பது வெறும் வெத்து வேட்டு நாட­கமே.